மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் இடம் பெற்ற “DITWAH” இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கான உதவிக்கரம் நீட்டும் செயற்பாட்டில் எமது பிரதேச செயலக ரீதியாக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் பெறுமதி 2,496,209.00 ஆகும்.
பாதிக்கப்பட்ட எம்மக்களுக்காக உதவிக்கரம் நீட்டிய எமது பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் பிரிவு மக்கள், சமூகமட்ட அமைப்புக்கள், நலன்விரும்பிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இச்செயற்பாட்டில் பல்வேறு வழிகளிலும் உறுதுணையாக இருந்த எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிரதேச செயலகம்,
மண்முனை தென்மேற்கு,
பட்டிப்பளை.





















