மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகமும் ஆட்பதிவு திணைக்களமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை 2026.03.04 மற்றும் 2026.03.05 ஆகிய இரு தினங்களில் பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் மாவடிமுன்மாரி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது இதுவரையில் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளத் தவறிய 75 பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான வசதியளிக்கப்பட்டிருந்ததுடன் இந்நிகழ்விற்கான அனுசரணையினை Brandina நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















