"உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் "தலைமுறையை காத்த தலைமுறையை காப்போம்" எனும் தொனிப்பொருளில் முதியோர் வார நிகழ்வுகள் 2025.10.03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் நடாத்திய இந்நிகழ்வின் அதிதிகளாக பிரதேசத்தின் சிறுவர்களும் முதியோர்களும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். அத்தோடு சிறுவர்களின் பல்வேறான கலைநிகழ்ச்சிகளும் முதியோர்களின் ஆடல் பாடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





















