ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
'Ratama Ekata' - ரட்டம எகட்ட தேசிய செயல்பாட்டு அங்குரார்ப்பண விழா - 2025.10.30
'Ratama Ekata' - ரட்டம எகட்ட தேசிய செயல்பாட்டு அங்குரார்ப்பண விழாவின் சத்தியப்பிரமாண நிகழ்வு 2025.10.30 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 10.00 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வலிகாட்டுதலின் கீழ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது எமது தாய்நாட்டிலிருந்து விஷ போதைப்பொருட்களின் அச்சுறுத்தல் முற்று முழுதாக ஒழிக்கப்படும் வரை கைவிடப்படதாத தேசிய பொறுப்பொன்றாக கருதி செயல்படுவோம் என்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் உறுதி செய்து சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


National Awarding Ceremony - 2025
National Achievements of Social Security Board - 2024


சர்வதேச சிறுவர் தின மற்றும் முதியோர் வார நிகழ்வு - 2025
"உலகை வழிநடத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் "தலைமுறையை காத்த தலைமுறையை காப்போம்" எனும் தொனிப்பொருளில் முதியோர் வார நிகழ்வுகள் 2025.10.03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் நடாத்திய இந்நிகழ்வின் அதிதிகளாக பிரதேசத்தின் சிறுவர்களும் முதியோர்களும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். அத்தோடு சிறுவர்களின் பல்வேறான கலைநிகழ்ச்சிகளும் முதியோர்களின் ஆடல் பாடல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு - 2025.09.15
அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2025.09.15 ஆம் திகதி திங்கட்கிழமையன்று பி.ப 2.30 மணிக்கு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.





















