2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 8.30 மணியளவில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களது தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டிற்காக உயிர் நீத்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதனை தொடர்ந்து உத்தியோகத்தர்களினால் அரச சேவை சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றியும், அவற்றை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் பிரதேச செயலாளர் அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களால் புதுவருட விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் இந்நிகழ்வானது உத்தியோகத்தர்களின் கலைநிகழ்வுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


















