தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கம், புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பும் இளைஞர் பரிமாற்ற திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2026.03.05 ஆம் திகதி வியாழக்கிழமையன்று அம்பிளாந்துறை கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து வருகை தந்த சகோதர இன இளைஞர் யுவதிகள் வரவேற்கப்பட்டதுடன் இவர்கள் எமது பகுதியில் 5 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றவுள்ளனர்.















