"முழுநாடும் ஒன்றாக " தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தினை நடைமுறையிப்படுத்தும் வகையில் 2026.03.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தினால் முச்சக்கரவண்டி தரிப்பிடம் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பட்டிப்பளை பொலீஸ் பொறுப்பதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















