மண்முனை தென்மேற்கு மற்றும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக மகளிர் அணியினருக்குமான நட்புறவு எல்லே போட்டி 2025.01.28 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று களுதாவளை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ணத்தை எமது மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மகளிர் அணியினர் சுவீகரித்திருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. J.J. முரளிதரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் வெற்றியீட்டிய அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















