இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் கடந்த 2025.10.16 ஆம் திகதி வியாழக்கிழமையன்று திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்ட அடைவை அடைந்தமைக்காக பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் சமூக ஓய்வூதிய திட்ட விடய உத்தியோகத்தர் உள்ளிட்டோர் சான்றிதழ், பதக்கம் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு 2025.11.03 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
















