පුවත්
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலிற்கு அமைவாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான கருத்தரங்கு நிகழ்வு 2025.07.09 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் IFS - Global Enterprise Software Solution Provider நிறுவனத்தின் Principal Engineer திரு. M.Vikanaraj அவர்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்ததுடன் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்படாது மனக்குறை விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு 2025.07.08 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று அம்பிளாந்துறை மற்றும் கற்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உதவி பிரதேச செயலாளரின் தலமையில் இடம்பெற்றது.

தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட உடற்பயிற்சி விழிப்புணர்வு நிகழ்வு 2025.09.12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.00 மணிக்கு மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு. S.பார்த்திபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றியிருந்ததுடன் உடற்பயிற்சி வளவாளராக ஆசிரியை திருமதி. கஜேந்தினி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் உடற்பயிற்சியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 2025.09.15 ஆம் திகதி திங்கட்கிழமையன்று பி.ப 2.30 மணிக்கு மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திரு. S. சுதாகர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2025.07.29 ஆம் திகதி செவ்வாய்கிழமை பி.ப 2.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ கந்தசாமி பிரபு அவர்களது தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திரு. S.சுதாகர், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி தலைமை முகாமையாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















