'Ratama Ekata' - ரட்டம எகட்ட தேசிய செயல்பாட்டு அங்குரார்ப்பண விழாவின் சத்தியப்பிரமாண நிகழ்வு 2025.10.30 ஆம் திகதி வியாழக்கிழமையன்று மு.ப 10.00 மணிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனை மற்றும் வலிகாட்டுதலின் கீழ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது எமது தாய்நாட்டிலிருந்து விஷ போதைப்பொருட்களின் அச்சுறுத்தல் முற்று முழுதாக ஒழிக்கப்படும் வரை கைவிடப்படதாத தேசிய பொறுப்பொன்றாக கருதி செயல்படுவோம் என்று மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் உறுதி செய்து சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















